டெல்லி: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற உள்ளதை அடுத்து நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கரில் முதல்வர் புபேஷ் பகேல் தலைமையில் காங்கிரசார் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரசார் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.