சென்னை: கர்நாடகாவின் நச்சு திட்டமான மேகதாதுவை முறியடிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு இரு மாநில மக்கள் இடையே பகையைமூட்டி குளிர்காய்கிறது. மேகதாது அணையை தடுப்பது மட்டுமின்றி தமிழகத்தின் குடிநீர் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை தேவை என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.