பெங்களூரு : கர்நாடகாவில் 10-ம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியார், சாவித்ரிபாய் புலே உள்ளிட்டோரின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கன்னட மொழிப் பாடநூல்களில் மீண்டும் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் படைப்புகளும் வரலாற்று பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.