பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பரசன் வாபஸ் பெற்றார்.பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டியிட்டிருந்த நிலையில் திடீர் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பாஜக கேட்டுக் கொண்டதால் வேட்பாளரை வாபஸ் பெற்றதாக அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளரும் வாபஸ் பெற்றுள்ளார். வேட்பாளரை வாபஸ் பெற்றதால் கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியில்லை.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் அன்பரசன் வாபஸ்..!!
previous post