பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 862 கனஅடியில் இருந்து 1,317 கனஅடியாக அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரியில் திறக்கும் நீரின் அளவு 562 கனஅடியில் இருந்து 1,017கனஅடியாக உயர்ந்துள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 2வது நாளாக 300கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 97.90 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 73.68அடியாக உள்ளது.