இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானில் இன்று அதிகாலை 03:38 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமாபாத்துக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 4.2 ரிக்டர் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
எனினும், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தவர்களுக்கு இந்த நிலநடுக்க உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.