கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அம்புக்கோவில் மற்றும் பிலாவிடுதி பகுதியை சேர்ந்த அம்புக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய எழும்பி முக்கூர்த்த நாறி போன்ற ஆயக்கட்டு பகுதிகளில் அமைந்துள்ள மற்றும் கூத்தம்பட்டி மற்றும் கூத்தம்பட்டி கிராம பகுதிகளில் அமைந்துள்ள பாசன விவசாய நில பரப்புகளில் வருடம் தோறும் குருவை, சம்பா, கோடை பருவ காலங்களில் நடவு பணிகள் தீவிரம் அடைந்து வருவது வழக்கம்.
இந்த ஆண்டு கூத்தம்பட்டி அம்புக்கோவில் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன விவசாயி செந்தில் மற்றும் அவரது சகோதரி மைத்துனர் மற்றும் ஏராளமான விவசாயிகளுக்கு உள்ள 5 ஏக்கர் பரப்பலவில் ஆள் பற்றாக்குறையின் காரணமாக இயந்திரம் மூலம் கோடை நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறும் போது ஆள்பற்றாக்குறையின் காரணமாக இயந்திரம் மூலம் கோடை நடவு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று விவசாயிகள் ஓட்டு மொத்தமாக கூறினர்.