காரைக்குடி: காரைக்குடியில் வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கியால் சுட்டு மோதல் ஏற்பட்டது. கழனிவாசல் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் காரில் வந்தவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவ திருகுமார் என்பவருக்கும், வாகனத்தை முந்தி செல்வதில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் காரில் வந்தவர்கள் கைத் துப்பக்கியை காண்பித்து தரையை நோக்கி சுட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த காவல்துறையினர் துப்பக்கியை தரையில் சுட்டு மிரட்டிய தேவகோட்டையை சேர்ந்த ராஜேஸ் மற்றும் பைரவனை பிடித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.