Saturday, May 18, 2024
Home » காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்: 5 பேர் படுகாயம்

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்: 5 பேர் படுகாயம்

by Nithya

காரைக்கால்: தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கோடியக்கரையின் தென்கிழக்கே தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த படகில் இருந்த 12 மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும், படகில் இருந்த ஜிபிஎஸ், மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படை பறித்து சென்றதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், படுகாயம் அடைந்த மீனவர்கள் அளித்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல்படை மீட்டு கரைக்கு அழைத்து வந்தது. பின்னர், இந்த தாக்குதலில் காயமடைந்த 5 மீனவர்களுக்கும் இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான சிகிச்சை மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

nineteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi