புதுச்சேரி: காரைக்கால் பட்டினச்சேரி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பட்டினம் காந்தி மார்க்கெட் அருகே உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.