குமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். மீன்வளத்துறை தடையை மீறி குமரி கடல் பகுதிகளில் இரவு நேரங்களில் பிற மாநில மீனவர்கள் மீன்பிடிப்பதாக புகார் அளிக்கப்பட்டது. குளச்சல், தேங்காய்ப்பட்டினம், கொல்லம், கர்நாடக மீனவர்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளைச் சேர்ந்த 5,000 மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.