தருமபுரி: கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 20 பயணிகளிடம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவிலிருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தருமபுரிக்கும் சேலத்துக்கும் இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளிடம் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.