காஞ்சிபுரம்:மாநில அளவில் நடைபெற்ற கிக் பாக்சிங் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர்கள், கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மேலகோட்டையூரில் மாநில அளவில் கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 47 மாணவர்கள் பல்வேறு உள்ளிட்ட பிரிவுகளில் கலந்து கொண்டு 41 தங்கம், 12 வெள்ளி மற்றும் 18 வெண்கல பதக்கங்களை வென்றனர். இதில் வெற்றிபெற்று பதக்கங்களை வென்ற மாணவர்கள் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைசெல்வி மோகனை சந்தித்து, வெற்றிபெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர். அப்போது, வரும் காலங்களில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் முனைப்புடன் கலந்து கொண்டு மேலும் பதக்கங்களை தமிழ்நாடுக்கு கொண்டு வருவோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.