காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில், ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பிக்காலம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம், ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான 2 பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், இப்பதவிக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள், 25 வயது முதல் 40 வயதுக்குப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்களது விண்ணப்பங்களை உரிய அனைத்து சான்றிதழ் நகல்களை 20.4.2023 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில், உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களை கொண்ட தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு மதிப்பூதியம் மாதத்தில், 5 தினங்களுக்கு (நாளொன்றுக்கு ரூ.1000 ஆயிரம் மட்டும்) வழங்கப்படும் இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317, கே.டி.எஸ். மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். மேலும், விவரங்கள் தேவைப்படுவோர் 044-2723 4950 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.