தேனி: தேனி கம்பம் நகரில் அரிசி கொம்பன் யானை புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியே வர வனத்துறை தடை விதித்துள்ளது. மின்வாரிய அலுவலகம் அருகே சுற்றித்திரியும் அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை கூறியுள்ளது. யானை சுற்றித் திரிவதால் கம்பம் நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.