மதுரை: கல்குவாரி நடத்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவர் குளத்தூரில் 2007-2022 வரை கல்குவாரி செயல்பட்ட இடத்தின் 300 மீட்டர் அருகே மீண்டும் குவாரிக்கு டெண்டர் கோரபட்டுள்ளது. கல்குவாரியால் நீர்வழிப்பாதைகள், விளைநிலம், சுற்றுசூழல், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.