Wednesday, May 15, 2024
Home » கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கு விசாரணை: குற்றப்பத்திரிகையை தயார் செய்தது அடையாறு மகளிர் காவல்துறை..!!

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கு விசாரணை: குற்றப்பத்திரிகையை தயார் செய்தது அடையாறு மகளிர் காவல்துறை..!!

by Kalaivani Saravanan

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகையை அடையாறு மகளிர் காவல்துறை தயார் செய்தது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் முழுவதுமாக கலாஷேத்ரா மாணவிகள் அந்த கல்லூரியில் படிக்கும் பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக போராட்டத்தில் குதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதன் அடிப்படையில் தினந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்திய மகளிர் காவல்துறை குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகையானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi