கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். 4 மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் வருகை தந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வருகின்றனர்.