சென்னை: செயிண்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும், செயலருமான ஜான் பிரிட்டோ மறைவு செய்தி அறிந்து மனம் வருந்தினேன். தாவரவியல் வல்லுநர் ஜான் பிரிட்டோ ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி, வேலைவாய்ப்பு பெற உறுதுணையாக இருந்தவர். ஜான் பிரிட்டோ மறைவால் வாடும் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான ஜான் பிரிட்டோ மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.
தாவரவியல் வல்லுநரான ஜான் பிரிட்டோ, ஏழை, எளிய மாணவர்கள் பலரும் உயர்கல்வி பெற உதவி, அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உறுதுணையாக இருந்துள்ளார். அவரது பிரிவால் வாடும் ஜெயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.