ராமநாதபுரம்: ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காக நிர்மலா சீதாராமனுக்கு ஏன் கண்ணீர் வரவில்லை? என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து செங்கல் மட்டுமே உள்ளது; 9 ஆண்டுகளாக முன்னேற்றமில்லை. 2024 தேர்தலுக்கான நாடகம்தான் தற்போதைய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.