சென்னை: வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ நேற்று வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்துச் சென்றார். அங்குள்ள கப்பல்போல் தெருவில் வாக்கு சேகரித்தபோது அங்கு ஒரு வீட்டில் இருந்து தட்டு நிறைய சமோசாவை ஜெயக்குமார் மற்றும் வேட்பாளருக்கு கொடுத்தனர்.
சமோசாவைப் பார்த்தவுடன் ஜெயக்குமார் மற்றும் வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகிய இருவரும் பிரசாரத்தை மறந்தனர். மெய்மறந்து இருவரும் சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பிரசாரத்திற்கு வந்த தொண்டர்கள் இதை கவனிக்காமல் சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டனர். இதனால் வேட்பாளரே இல்லாமல் தனியாக ரோட்டில் நின்று அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் கையில் உள்ள சமோசாவை அப்பகுதி மக்கள் யாரும் பார்க்க கூடாது என்பதற்காக மறைத்து வைத்து சாப்பிட்டனர்.