கல்விப் பணியில் 46 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செயல்பட்டு வரும் திருநின்றவூர் ஜெயா கல்விகுழுமம். சென்னைப் பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி பெற்று அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுமதியோடு இணையப் பெற்றது. மாணவர்களுக்கு கல்வி, திறன்மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு என பல நிலைகளிலும் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் சீரிய கல்வி நிறுவனம். அறக்கட்டளைத் தலைவர் முனைவர் அ.கனகராஜ் அவர்கள் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் புதிய புதிய பாடப் பிரிவுகள் உருவாகி வருகின்றது.
பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல்கல்லூரி, மருத்துவக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, செவிலியர் பயிற்சிக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என தனது கிளைகளை விரித்து இக்குழுமம் கல்விச் சேவை புரிந்து வருகிறது. ஆண்டு தோறும் பல்கலைக்கழக அளவில் மாணவர்கள் ரேங்க் மற்றும் பதக்கங்கள் பெற்று சிறப்பு செய்கின்றனர்.