டெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை ஒட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை இந்தியா அனுசரித்து வருகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முதல் பிரதமர் முக்கியப் பங்காற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக நேரு ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
மே 27, 1964 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் உயிர் நீத்தார். அவர் 1947 முதல் 1964 வரை தனது 74வது வயதில் இறக்கும் வரை பிரதமராக இருந்தார். அவர் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார், குழந்தைகள் அவரை சாச்சா நேரு என்று அழைப்பார்கள். ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.