ஐப்பான்: ஜப்பானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும் ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. புதிய ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனம் ரூ.83 கோடி முதலீடு செய்கிறது. திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்ஃப்லேட்டர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.