மதுரை : அலங்காநல்லூர் அருகே கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு கலையரங்கம் ஒருவாரத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகும் என்று அமைச்சர் மூர்த்தி தகவல் அளித்துள்ளார்.மேலும் பேசிய அவர், “அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டை அமர்ந்து பார்வையிடும் வகையில் பிரமாண்ட கேலரி வசதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 95% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஒருவாரத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும்,”என்றார்.