சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சிறை அதிகாரி கோபி கிருஷ்ணா அய்யாவு(57). இவர் சிறை கைதிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த நவம்பரில் இவர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவருக்கு தண்டனையை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. கோபி கிருஷ்ணாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.