ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீரர் டாவில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனேவுடன் (20 வயது, 6வது ரேங்க்) மோதிய மெத்வதேவ் (27 வயது, 2வது ரேங்க்) 7-5, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. களிமண் தரை மைதானங்களில் நடக்கும் தொடரில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் வென்ற 6வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து சாம்பியன் பட்டமாகும்.