ஜெனின்: இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் பலியான 3 பாலஸ்தீனியர்கள் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேற்கு கரை நகரமான ஜெனினில் கார் ஒன்றை குறிவைத்து இஸ்ரேலல் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் பலியான 3 பேரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 100 கணக்கானோர் கலந்து கொண்டு பலியானவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனிடையே வாகனத்தை குறிவைத்து நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதனிடையே கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான சிசிடிவி பதிவும் வெளியாகியுள்ளது.