எருசலேம்: இஸ்ரேலில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மார்கலியோட் கிராமத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். ஷியா பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புல்லா தாக்குதலில் இந்தியர் பலியானது அதிர்ச்சியளிக்கிறது. இஸ்ரேலிய சிறந்த மருத்துவக் குழுவால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக இஸ்ரேல் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.