டெல்லி: ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒற்றை தலைவலியால் அவதிப்பட்ட சத்குருவுக்கு, டெல்லி அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிடி ஸ்கேனில், மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு கண்டறியப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு சத்குரு விரைந்து குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சத்குரு விரைவாக குணமடைய பக்தர்கள் பிரார்த்தனை செய்து வருகின்ற்றனர்.