மும்பை:இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் அயர்லாந்துக்கு செல்கிறது. அங்கு அடுத்த மாதம் 18, 20, 23ம் தேதிகளில் 3 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது.
இந்த தொடரில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. விவிஎஸ் லட்சுமணன் பயிற்சியாளராக செல்ல உள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக கனிட்கர், பவுலிங் பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலேவும் பணியாற்ற உள்ளனர்.