டெல்லி: தொழில்நுட்ப கோளாறால் ரயில்வே டிக்கெட் முன்பதிவு இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி. முடங்கியதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. டிக்கெட் கட்டணம் குறைவு, வசதியான பயணம், விரைவான பயணம் போன்ற காரணங்கள் பலரும் ரயில் பயணங்களையே தேர்வு செய்கின்றனர். இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரயில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணங்களை திட்டமிட்டு அதற்கேற்றவாறு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். திடீர் பயணத்திற்கு தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் முறையை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்றாலும், தற்போது பெரும்பாலான பயணிகள் ஆன்லைனிலேயே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் ரயில்வே டிக்கெட் முன்பதிவு இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி. முடங்கியதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
20 நிமிடங்களாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்வது, அதே போல ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டின் தற்போதைய நிலை போன்ற விஷயங்களை பார்ப்பதில் பொதுமக்களுக்கு காலம் எடுத்துக்கொள்ளும் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தொழில்நுட்ப கோளாறை சரி செய்து வருவதாகவும் ஐ.ஆர்.சி.டி.சி. தரப்பில் அதிகாரபூர்வமாக அவர்களது இணையதள ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையானது பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக மீண்டும் அப்டேட் செய்து பொதுமக்கள் அவர்களது சேவையை தொடர்வதற்காக சரி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதுவரையில் சற்று காத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.