ஈரான்: ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 103ஆக அதிகரித்துள்ளது. இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரானின் கெர்மான் நகரில் உள்ள சாஹேப் அல் ஜமான் மசூதி அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.