சென்னை: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,840-க்கும், கிராம் ரூ.6,855-க்கும் விற்பனை. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,855க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 89க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,440க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதே நேரத்தில் சவரன் ரூ.55 ஆயிரத்தை தொடுமோ என்ற அச்சமும் நகை வாங்குவோர் இடையே இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,780க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,240க்கும் விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக தங்கம் விலை மாற்றம் செய்யப்படாத நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.