சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகை விஜயலட்சுமியிடம் காவல் துணை ஆணையர் உமையாள் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். ராமாபுரம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியிடம் நேற்று 5 மணி நேரமாக விசாரணை நடந்த நிலையில் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.