Saturday, July 27, 2024
Home » கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாமா? அரசு பரிசீலிக்க ஐகோர்ட் ஆலோசனை

கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாமா? அரசு பரிசீலிக்க ஐகோர்ட் ஆலோசனை

by Ranjith

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய-மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சேர்த்துள்ளனர். இதனால் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர், அந்த சலுகையை இழக்க வேண்டியுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்த பின் இதுவரை ஒரு மூன்றாம் பாலினத்தவர் கூட இட ஒதுக்கீடு சலுகையை பெறவில்லை என்றார். இதையடுத்து நீதிபதிகள், 3ம் பாலினத்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4க்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

6 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi