பெங்களூரு: நிறத்தை குறிப்பிட்டு அவமதிப்பது கொடுமையானது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த தம்பதி கடந்த நவம்பர் 15, 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணம் ஆன நாள் முதல் கணவர் கருப்பாக இருந்ததால் மனைவி வெறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் குழப்பம் மற்றும் சண்டை தொடர்ந்துள்ளது. இருப்பினும் கணவர் தன் குழந்தைக்காக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 29, 2011-ம் ஆண்டு மனைவி தரப்பில் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில் தனது மாமியார் மற்றும் கணவர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப் படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில் கணவர் கைது செய்யப்படுகிறார். அந்த பின் ஜாமினில் வெளியே வந்த கணவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என 2012-ம் ஆண்டு பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் மனைவி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு விவாகரத்து தர மறுத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவை ஏற்று 6 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் மனைவி தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை. ஆனால், கணவர் வாதங்கள் தன் மனைவி தன் கருப்பாக இருப்பதாக கூறி கொடுமைப் படுத்தியதாகவும், அவமதிப்பதாகவும் அதற்கான ஆதாரமாக வீடியோ ஒன்றை அளித்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிறத்தை காரணம் காட்டி ஒருவரை அவமதிப்பது, கணவரை கருப்பன் என அழைப்பது கொடுமையானது. மேலும், அத்தகைய குற்றச்சாட்டு யாருக்கு எதிராக முன்வைக்கப்படுகிறதோ, அவர் மிகப்பெரிய மனக் கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்று சுட்டிக்காட்டி கணவரின் வாதத்தை ஏற்று கார்நாடக உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.