வங்கியில் கணக்கில்லாதவர்களை கூட கணக்கிட்டு சொல்லிவிடலாம். ஆனால் இன்று சமூக வலைதளங்களில் கணக்கில்லாதவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். மேலும் தன்னுடைய பெயரை வைத்து போலியாக கணக்குகள் ஆரம்பித்து அதன் மூலம் மக்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காகவே சமூக வலைத்தளங்களில் தங்களுக்கென கணக்கு இருந்தே ஆக வேண்டும் என்னும் கட்டாயத்திற்குள் இப்போது இருக்கும் விஐபிகள், நடிகர்கள் கூட தள்ளப்படுகின்றனர். அப்படித்தான் நீண்ட காலமாகவே ட்விட்டர் மற்றும் முகநூலில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து வந்தார் விஜய். தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் பெயரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகவே அதிகாரப்பூர்வ கணக்கை ஆரம்பித்திருக்கிறார் விஜய். மேலும் இதனை அட்மின் குழு கவனித்துக் கொள்ளும் என்னும் விபரங்களுடன் துவங்கப்பட்டிருக்கும் விஜயின் இன்ஸ்டா பக்கம் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே முந்தும் அளவிற்கு மிகக் குறைந்த நேரத்தில் அதிக ஃபாளோயர்களை பெற்ற பக்கமாக உலக ட்ரெண்டாகி இருக்கிறது.
இன்ஸ்டாவில் இளையதளபதி !
previous post