சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள மத்தூர் மாடர்ஹள்ளி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (34) என்பவர் நேற்று மாலை, சேலம் சரக டிஐஜி உமாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘வேலை வாங்கி தருவதாக கூறி சுற்றுலா விசாவில் எனது அக்கா மகேஸ்வரியை (40) திருப்பத்தூரை சேர்ந்த முகமது அலி மற்றும் முத்து ஆகியோர் மலேசியாவிற்கு அனுப்பி வைத்து, அருள் என்பவரிடம் ரூ.1.26 லட்சத்துக்கு விற்றுவிட்டார்கள். எனவே மூவரும் மீதும் நடவடிக்கை எடுத்து, அக்காவை உயிரோடு மீட்டுத்தாருங்கள்’ எனக்கூறியிருந்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட டிஐஜி உமா , மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின்பேரில் மத்தூர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.