புதுடெல்லி: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள ‘அக்னிபாத்’ திட்டமானது, ராணுவத்தில் நிரந்தரமாக பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். ஒன்றிய அரசின் இந்த முடிவால், கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டது. எனவே ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முப்படைகளின் தலைவர் என்பதால், அவருக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.