சென்னை: அநீதிக்கு எதிரான ஜனநாயக எதிர்ப்புகள் தொடரும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் சூழ்ச்சிகளில் ஒன்றாக பாஜக அரசு CAA வை அமல்படுத்தியுள்ளது. இதில் ஈழத்தமிழர்களையும், நேபாள கிருத்துவர்கள், அண்டை நாட்டு இந்திய பூர்வகுடி முஸ்லிம்களையும் உள்ளடக்க வேண்டும். இதில் பாகுபாடு கூடாது என்பதே மஜகவின் நிலைபாடு! என்றும் அநீதிக்கு எதிரான ஜனநாயக எதிர்ப்புகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.