நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் கமல்(57), அவரது மனைவி டீனா கமல்(54) மற்றும் அவர்களின் மகள் அரியானா கமல்(18) ஆகியோர் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் டோவர் பகுதியில் மிகப்பெரிய பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் தலையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் கடந்த டிசம்பர் 28ம் தேதி பண்ணை வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் டீனா கமல், அரியானா கமல் இருவரையும் ராகேஷ் கமல் சுட்டு கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.