நெல்லை: தமிழ்நாடு மீனவர்கள், விவசாயிகளுக்கு எதுவும் செய்ய நரேந்திர மோடி அரசு மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிதி அதிகாரம், தொலைத்தொடர்பு முழுவதும் ஏகபோகமாக சில தொழிலதிபர்களிடம் குவிக்கப்பட்டுள்ளன. இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை. இளைஞர்களை வேலையில்லாத நிலைமைக்கு தள்ளிவிட்டு விட்டார் பிரதமர் மோடி. இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க இந்தியா கூட்டணி விரும்புகிறது.