டெல்லி: உலக அளவில் பேட்டரி கார்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் தனது உற்பத்தி ஆலை தொடங்குவது குறித்து மீண்டும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரி 100%-ஆக இருக்கும் நிலையில், அவற்றை குறைக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு எலன் மஸ்க் முன் வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது.