தமிழகம் முழுக்கவே ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் வீக்’ என்னும் முன்னேற்பாட்டுடன் இசை, நடனம், சாலையோர நடைப்பயணம், என பல விஷயங்களை தெருக்களில் மக்கள் கூடி செய்து வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக கோவையில் இந்திய சைகை மொழியில் புலமை பெற்ற வல்லுநர்கள், மற்றும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்கள் பொதுமக்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வீடியோக்கள்தான் சமூக வலைத்தளங்களில்வைரலாகிக்கொண்டிருக்கின்றன. இந்திய சைகைமொழியை பொறுமையாக அவர்கள் சொல்லிக் கொடுப்பதும், அதற்கான வாசகங்கள் தாங்கிய பேனர்கள் ஆங்காங்கே காட்சியளிப்பதும் என ஒவ்வொரு வீடியோக்களுமே மனதை நிறைத்துவருகின்றன.