லாகூர்: உலக கோப்பை பைனலில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கூறியதாவது: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலமாக கிரிக்கெட் வென்றுள்ளது. ஒருவேளை இந்தியா வென்றிருந்தால், அது கிரிக்கெட் விளையாட்டிற்கே மிகவும் சோகமான ஒன்றாக அமைந்திருக்கும். இந்திய அணி சொந்த மண்ணில் ஆடியதால் பிட்ச் மற்றும் சூழல் அவர்களுக்கு சாதகமானதாக மாற்றி கொண்டனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இப்படியொரு ஒரு மோசமான பிட்சை நான் பார்த்ததே இல்லை. இந்திய அணி தோல்விக்கு கிரிக்கெட் விளையாட்டுக்கே நன்மையை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.