பெங்களூரு : சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் இரண்டு முறை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் சந்திரயான் 3 செயற்கோள் புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செயற்கை கோளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திரயான் விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு கட்டமாக புவி சுற்று வட்ட பாதையில் விண்கலத்தை உயர்த்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் புவியின் இறுதி சுற்று வட்டப்பதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. கடந்த 5ம் தேதிகடைசி கட்டமாக லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவின் சுற்று வட்டபாதைக்குள் சந்திராயன் 3 நுழைந்தது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.
அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.தற்போது, மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 16, 2023 அன்று சுமார் 08.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து நிலவின் அருகே பயணிக்கும். பின்பு அன்றைய தினம் செயற்கை கோள் சந்திராயன் 3 விண்கலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் புரொப்பலன்சன் மாட்யூல் இயக்கப்பட்டு நிலவிற்கு அருகில் சென்று அங்கிருந்து விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கும். சந்திரயான் 3 நிலவின் நோக்கிய தனது 40 நாள் பயணத்தில் முதல் 30 நாட்கள் வெற்றிகரமாக பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.