Wednesday, May 22, 2024
Home » இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் ராகுல், கார்கே சூறாவளி சுற்றுப்பயணம்: செல்வப்பெருந்தகை தகவல்

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் ராகுல், கார்கே சூறாவளி சுற்றுப்பயணம்: செல்வப்பெருந்தகை தகவல்

by Mahaprabhu

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரசில் 4 குழுக்களை நியமித்துள்ளது. இந்த குழுக்களின் ஆலோசனை கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: அகில இந்திய தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஓரிரு நாளில் சுற்றுப்பயண விவரங்களை அறிவிப்போம். வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் என்பதே கிடையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி சுற்றுப்பயணம் செய்வதற்குள் திருநெல்வேலி தொகுதி வேட்பாளரை அறிவித்தோம். மயிலாடுதுறை வேட்பாளர் நாளை(இன்று) காலை வேட்பு மனு தாக்கல் செய்வார். ஆந்திராவில், தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர் 4 பேர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு போட்டு பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் 4 பேரும் பாஜகவில் சேர்ந்த உடன் கங்கையில் குளித்து புனிதமானவர்கள் போன்று எல்லா வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. இப்படி நிறைய உதாரணங்கள் உள்ளன. மாநிலங்களை சிதைப்பது, மாநில உரிமைகளை பறிப்பது, மாநில கட்சிகளை மிரட்டுவது, வழக்கு போடுவது, பின்னர் அவர்களை பாஜவில் சேர்த்து அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்வது தான் பாஜவின் வேலையாக இருக்கிறது. இந்தியா முழுவதும் அமைதி புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். தமிழகத்தில், மோடி என்ன சொல்லி வாக்கு கேட்பார்?. அவர் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தமிழகத்தில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றி விட்டனர். சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. கூட்டத்தில், மூத்த தலைவர் தங்கபாலு, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு, சட்டத்துறை இணை செயலாளர் எஸ்.கே.நவாஸ் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

twelve + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi