டெல்லி: இந்தியாவில் நேற்று 1,331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 2,109பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,72,800ல் இருந்து 4,49,74,909 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும்15 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,707ல் இருந்து 5,31,722ஆக அதிகரித்துள்ளது.