டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,91,582லிருந்து 4,49,91,756ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 2பேர் பலியாகி உள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,880லிருந்து 5,31,882ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 322 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,56,681 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,343லிருந்து 3,193ஆக குறைந்துள்ளது.